பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத் திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின் எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே