Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3116
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்

பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க

வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்

செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்

திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.