பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங் குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ