பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ