Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3670
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப் 

பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும் 
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத் 

திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா 
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே 

உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே 
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே 

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.