Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4115
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் 

பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் 
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் 

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே 
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே 

மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே 
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும் 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.