Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5755
பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் 

பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற 
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது 

திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே 
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார் 

ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் 
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும் 

உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.