பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார் மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான் நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின் மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே