Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3074
பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்

பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்

கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்

தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்

மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.