Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4668
பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த 

பெருந்தகைஎம் பெருமான் தன்னைச் 
செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப் 

பெருங்களிப்புச் செய்தான் தன்னை 
முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு 

கொடுத்தெனக்கு முன்னின் றானை 
அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.