பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும் குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே