புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில் போந்தருள் அளித்தசற் குருவைக் கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த கருணையங் கடவுளைத் தனது சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே தோளுறப் புனைந்தமெய்த் துணையைத் தன்னிக ரில்லாத் தலைவனை எனது தந்தையைக் கண்டுகொண் டேனே