Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4889
புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப் 

பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர் 
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார் 

சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம் 
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார் 

வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார் 
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.