புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன் றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ