Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5811
புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் 

புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் 
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் 

செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ 
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் 

பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே 
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன் 

மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.