புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன் மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே