புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே