புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என் தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக் கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே