புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச் சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய் கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச் செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்