பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம் ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே