Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3037
பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே

பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே

கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்

மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்

எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.