Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3058
பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்

போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க

வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்

பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே

எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.