பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப் பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக் கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக் கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள் பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப் பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை எண்அம ராதஎ ழிலுடை யானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே