Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3809
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் 

பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே 
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை 

துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த 
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன் 

அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே 
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் 

உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.