பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளால் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத் துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே