பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய் அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே