Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4847
பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான் 

பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி 
ஒருஞானத் திருவமுதுண் டோ ங்குகின்றேன் இனிநின் 

உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன் 
அருளாய ஸோதிஎனக் குபகரிக்கின் றதுநீ 

அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க 
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ 

சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.