Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3677
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் 

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் 
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே 

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் 
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே 

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே 

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.