பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே