பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே