பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம் பெரும்பொருளைப் புனிதம் தன்னை என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட பெருங்கருணை இயற்கை தன்னை இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும் பெருவாழ்வை என்னுள் ஓங்கும் அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ