பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால் செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில் சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர் கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர் எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே