Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3784
பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே 

பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக் 
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத 

கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத 
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர் 

மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும் 
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி 

மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.