பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான் ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே