பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம் கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான் மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால் தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே