Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4171
பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப் 

புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் 
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச் 

செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க 
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும் 

ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே 
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே 

நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.