Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3343
போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் 

பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் 

இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்

களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் 

முனிந்திடேல் காத்தருள் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.