Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3798
மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே 

மாலையும் காலையும் மத்தியா னத்தும் 
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் 

காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து 
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் 

இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால் 
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.