மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே மாலையும் காலையும் மத்தியா னத்தும் கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால் அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே