மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில் வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம் எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான் விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம் அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி