மண்ணும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல் மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான் பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே