Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3408
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் 

வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் 

கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் 

இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் 

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.