மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம் கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன் தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே