Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4892
மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு 

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் 
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே 

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் 
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே 

பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார் 
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி 

என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.