மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய் இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய் இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம் சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே