Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4226
மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது 

வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ 
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி 

புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி 
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார் 

பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.