Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5781
மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் 

வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி 
துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத் 

துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் 
இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால் 

இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே 
ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.