Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4191
மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான் 

மறப்பனோ கனவினும் என்றாள் 
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ 

உயிர்தரி யாதெனக் கென்றாள் 
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக் 

கடலமு தளித்தருள் என்றாள் 
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.