மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில் கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே