மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன் மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே