Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4013
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல 

வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத் 
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த 

தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப் 
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் 

புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக் 
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே    

--------------------------------------------------------------------------------

 ஆண்டருளிய அருமையை வியத்தல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.