மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல் உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர் குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே